Follow Us:
Home/விளையா‌ட்டு/விராட் கோலி, ரோஹித் சர்மா அபார சதத்தால் இந்திய அணி வெற்றி
விளையா‌ட்டு

விராட் கோலி, ரோஹித் சர்மா அபார சதத்தால் இந்திய அணி வெற்றி

Tuesday, August 25, 2026iCineMass Editorial
விராட் கோலி, ரோஹித் சர்மா அபார சதத்தால் இந்திய அணி வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரின் அபார சதத்தால், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.

நேற்று முதலாவது ஆட்டம் கவுகாத்தியில் நடந்தது. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. இதில் தவான் 4 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் அதிரடியாக விளையாடத் தொடங்கினார்.

விராட் கோலி அதிரடியாக ஆடி 88 பந்துகளில், 36-வது சதத்தை பூர்த்தி செய்தார். ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி தனது 20-வது சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியாக விராட் கோலி 140 ரன்களில் அவுட்டானார்.

அவரைத் தொடர்ந்து ராயுடு, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். இந்த ஜோடி அணியின் வெற்றி இலக்கை 42.1 ஓவர்களில் கடந்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி வரும் 24-ம் தேதி நடைபெறும்.